Monday, May 4, 2026

அரூப முத்து

 ஒரு மாதுளம்பழம் பிரியத்துக்குரியவர்களை

உனக்கு நினைவூட்டுவதாய் சொல்வாய்

தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் - அதற்கு

உண்டெனும் உனது நம்பிக்கைகள்

இப்போதும் உண்மையா?

நான் ஒரு மாதுளையைப் பிளக்கிறேன்

உன்னைப் பற்றிய நினைவுகள் சிதறுகின்றன 

கழுவிட முடியாத உதிரக் கறையென

இருகைகளிலும் பரவுகிறது இளங்கனியின் சாறு

இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

இறுதி சந்திப்பின் போது - நம்

உணவு மேசையிலிருந்து களவு போய்விட்ட

அரூபமான

சிவந்த

ஒற்றை

மாதுளை நல் முத்து !


No comments:

Post a Comment