ஒரு மாதுளம்பழம் பிரியத்துக்குரியவர்களை
உனக்கு நினைவூட்டுவதாய் சொல்வாய்
தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் - அதற்கு
உண்டெனும் உனது நம்பிக்கைகள்
இப்போதும் உண்மையா?
நான் ஒரு மாதுளையைப் பிளக்கிறேன்
உன்னைப் பற்றிய நினைவுகள் சிதறுகின்றன
கழுவிட முடியாத உதிரக் கறையென
இருகைகளிலும் பரவுகிறது இளங்கனியின் சாறு
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
இறுதி சந்திப்பின் போது - நம்
உணவு மேசையிலிருந்து களவு போய்விட்ட
அரூபமான
சிவந்த
ஒற்றை
மாதுளை நல் முத்து !
No comments:
Post a Comment