கருங்கல் தூணில் சாய்ந்து
பகவதியின் அம்பலத்து
தாழ்வாரத்தினின்று அமையும்
சரம் சரமான விளக்குகளை நோக்கியபடி
நீ ஏங்கி நிற்பது ஏனோ….?!
கொஞ்சம் கவனித்துப் பாரேன்.
என் மனதின் பிரகாரங்களை..
அதில்..
பொன்சுடர் அசைய எரியும் தீபங்களை..
அத்தனை தீபங்களின்
மொத்தமான
ஒரே
மகா வெளிச்சம்
நீதானே…!
No comments:
Post a Comment