கவிதைகள்
கரிய கற்பாறைகளினூடே
மெலிந்த சுனை ஓடி வரும் தடத்தில்
காற்றில் ஆடியபடி இருக்கும்
சிறிய பசுஞ்செடிகள் மீது
மெல்ல… மெல்ல…படியும் அந்தியை…
பா..
ர்..
த்..
த..
வா..
று….
நான் இந்த மலைமுகடுகளை நோக்கி
ஏன் ஏறிக் கொண்டிருக்கிறேன்
என்பதை மறந்தே விட்டேன்.
No comments:
Post a Comment