Tuesday, May 5, 2026

மலை ஏறும் வழியில்


கரிய கற்பாறைகளினூடே

மெலிந்த சுனை ஓடி வரும் தடத்தில்

காற்றில் ஆடியபடி இருக்கும்

சிறிய பசுஞ்செடிகள் மீது

மெல்ல… மெல்ல…படியும் அந்தியை…

பா..

ர்..

த்..

த..

வா..

று….

நான் இந்த மலைமுகடுகளை நோக்கி

ஏன் ஏறிக் கொண்டிருக்கிறேன்

என்பதை மறந்தே விட்டேன்.

No comments:

Post a Comment