Tuesday, May 5, 2026

அடைக்கலம்


​தினமும் முன்மதியப் பொழுதுகளில்

துயில் களைபவள்

தன் பின்னந்தலையில்

சதா கொக்கரித்தபடி இருக்கும்

சேவலைச் சபித்தபடி எழுகிறாள்.

அதன் செம்மையான இறகுகளை

ஒவ்வொன்றாகப்

பிடுங்கியவாறு

சப்தங்கள் அடங்கிவிடும்

இரவுக்குள் குதித்துவிடத்

தயாராக நிற்கிறாள்

ஸ்திரமற்ற பகலின் பால்கனியில்.

No comments:

Post a Comment