தினமும் முன்மதியப் பொழுதுகளில்
துயில் களைபவள்
தன் பின்னந்தலையில்
சதா கொக்கரித்தபடி இருக்கும்
சேவலைச் சபித்தபடி எழுகிறாள்.
அதன் செம்மையான இறகுகளை
ஒவ்வொன்றாகப்
பிடுங்கியவாறு
சப்தங்கள் அடங்கிவிடும்
இரவுக்குள் குதித்துவிடத்
தயாராக நிற்கிறாள்
ஸ்திரமற்ற பகலின் பால்கனியில்.
No comments:
Post a Comment