தொடுவானம் வரை நீண்டிருக்கிறது
நம் நினைவின் ஏரிக்கரை.
அந்தியில் – மெல்ல இதழ்கள் விரிக்கும்
செவ்வல்லி மலர்களுக்குள்
பகல் முழுக்கத் துஞ்சிய இரவு
கருவண்டென வெளியேறி
காற்றில் இருள் சேர்க்கும்.
கொட்டும் பனியில் இதென்ன…?!
நம் ஆலிங்கனத்தின் பூரணமா
வெண்ணெய்ப் பந்தெனத் திரண்டெழும்பி
வானில் ஒளிர்கிறது…?!!
உன் சுட்டுவிரலால் தொட்டு
கொஞ்சமாய் ருசிக்கிறேன்
இக்குளிர் மாதத்து முழுநிலவை.
கற்கண்டாய் இனிக்கும் இது
இனி – உன் பிரிவில்
கற்பூரக் கட்டியெனக் கரையத் துவங்கும்.
No comments:
Post a Comment