Tuesday, May 5, 2026

முயக்கம்

 

​நீ – கண்களின் இடத்தில்

இரத்தினக் கற்கள் கொண்ட

கரு நிற இராஜநாகம்.

கரிய உடலில் செவ்வொளி கதிராட

நீ படமெடுக்கையில்

மாறன் கை வில்லென

வளைகிறது என் தேகம்.

ஆலம் விழுதுகளைச் சுற்றி – நாம்

பின்னிப் பிணையும் சொப்பனங்களில்

காமத்தின் விடம் அமுதெனச் சொட்டுகிறது.

தாழம்பூ காடுகள் வாய்க்கவில்லை நமக்கு.

இந்தக் கான்கிரீட் மண்டலத்தில்

சம்பங்கிப் பூக்கள் மயக்கும் வாசத்துடன்

மெத்தென உதிர்ந்திருக்கும்

நிலா மேயும் முற்றமொன்றில்

வெண்மஞ்சள் சாரையெனக் காத்திருக்கிறேன்

சரசரவென விரைந்து வா….

No comments:

Post a Comment