Tuesday, May 5, 2026

எதைத் தருவது…?


​உனக்கு தர

மிகவும் அபூர்வமான

ஒன்றைத் தேடுகிறேன்

விலைமதிப்பில்லாத ஒன்றை

உலகம் இதுவரை அறிந்திராத ஒன்றை

நீ முற்றிலும் எதிர்பாராத ஒன்றை.

ஆனால் – ஏதொன்றும்

கைக்கு வரப்பெற்றதும்

நீர்ப்பாதையின் கூழாங்கல்லெனக்

குளிர்ந்து விடுகிறது.

ஏழு மலைகளுக்கப்பால்…

ஏழு கடல்களுக்கப்பால்…

இருண்ட குகையின்

கதவற்ற கூண்டுக்குள் தத்தும்

தங்கக் கிளியே….

கூழாங்கற்களைச் சேகரித்தபடி

நடுகல்லென சமைந்து போன யாரையேனும்

தெரியுமா உனக்கு…?!

No comments:

Post a Comment