உனக்கு தர
மிகவும் அபூர்வமான
ஒன்றைத் தேடுகிறேன்
விலைமதிப்பில்லாத ஒன்றை
உலகம் இதுவரை அறிந்திராத ஒன்றை
நீ முற்றிலும் எதிர்பாராத ஒன்றை.
ஆனால் – ஏதொன்றும்
கைக்கு வரப்பெற்றதும்
நீர்ப்பாதையின் கூழாங்கல்லெனக்
குளிர்ந்து விடுகிறது.
ஏழு மலைகளுக்கப்பால்…
ஏழு கடல்களுக்கப்பால்…
இருண்ட குகையின்
கதவற்ற கூண்டுக்குள் தத்தும்
தங்கக் கிளியே….
கூழாங்கற்களைச் சேகரித்தபடி
நடுகல்லென சமைந்து போன யாரையேனும்
தெரியுமா உனக்கு…?!
No comments:
Post a Comment