Tuesday, May 5, 2026

சொல்

 

​ஒரு சொல்லுக்குள்

கடல் ததும்பி நிற்பதை

இன்று பார்த்தேன்.

பின்

கடலின் மேல்

ஒரு சொல் எழுதப்பட்டதையும்

நின்று பார்த்தேன்.

அப்புறம்

அது ஒரு கடற்காகமென எழும்பி

வானில் திரிந்து கொண்டிருந்தது.

சற்றே பொறு…

என் தோளில் வந்தமர்ந்தால்

சொல்லி அனுப்புகிறேன்.

உன் கைகளுக்கு மாற்றிக் கொள்கையில்

அது ‘கா’வெனக் கரைந்து

வெள்ளை நுரையென வழிந்து

மஜ்ஜை வரை நனைத்தோடும்

மாயம் காண்பாய்.

No comments:

Post a Comment