Tuesday, May 5, 2026

பிரத்தியேகம்

 

​இன்று உன்னைத் தேடி

உன் வளாகத்திற்கு வந்திருந்தேன்

உனக்கென வாங்க எண்ணி

வாங்காமலிருந்த மலர்களை

கையில் வைத்திருந்தேன்

அருகில் வரும் உனை நோக்கி

பதைபதைப்புடன் அமர்ந்திருந்தேன்

நல்ல வேளை

ஒரு சிறு புன்னகையுடன்

நீ அந்தப் பிரத்தியேக மலர்களை

கண்டு கொண்டாய்

வாங்கி வந்திருந்தால்

அவை உனக்கானதாய் மட்டுமல்லாமல்

எல்லோருக்குமானதாய் ஆகியிருக்கும்.

No comments:

Post a Comment