எனக்கென நீ கட்டிய வீட்டில்
தினமும் கவிதைகள் பிறக்கின்றன
மேஜையின் இழுவறையில்
கட்டிலின் அடியில்
திரைச்சீலை மடிப்புகளில்
கால்விரல் இடுக்குகளில்
ஒளிந்து விளையாடுகின்றன
தேடிப்பிடித்து கூட்டி எடுத்து
சேகரிக்கிறேன் அட்டைப் பெட்டிகளில்
சாம்பல் பூனைகளாய் துள்ளும்
அவற்றின் நடுவே
கவனத்தினின்றும் தவறவிட முடிவதில்லை
தினமும் உனக்காய்
பிறக்கிற கவிதை மட்டும்
கண்மூடி வாளாவிருப்பதை
No comments:
Post a Comment