Monday, May 4, 2026

தனி

 

​சேற்று வயலில் இரையெடுத்துக் கொண்டு

அந்தி வானில் மறையும்

வெண்கொக்கு கூட – ஏனோ

உன்னைத் தான் நினைவு படுத்துகிறது.

இதோ இந்த மனோரஞ்சித மரத்தடியில்

தனியே நிற்கும் எனக்கு

மாறிக் கொண்டேயிருக்கும்

இம்மலர்களின் வாசத்தைத் தவிர

வேறு துணையென்று ஏதுமில்லை.

கவியும் இவ்விரவு

வெறுமையான நத்தைக் கூடென

அவ்வளவு துயர் மிகுந்ததாக இருக்கிறது.

பற்பல வலசைப் பருவங்களுக்கு

முன் நிகழ்ந்த ஒரு கலவியை

எத்தனை காலத்திற்குத் தான்

துணை கொள்ள முடியும்…?!

நள்ளிரவில் பசியோடு அலறும்

அடர்வனத்துக் கொற்றவைக்கும்

குருதிப்பலியிட்டு வெகு நாட்களாயிற்று.

No comments:

Post a Comment