நாம் இந்தக் காட்டிற்குள் நடந்து
வெகு தொலைவு வந்து விட்டோம்
நீ கையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த
சிறு பூவொன்றை வைத்திருக்கிறாய்
உனக்கு இன்னுமொரு பூ
வேண்டுமெனத் தோன்றி விட்டது
எளிய விண்ணப்பம் தானே!
ஆனால் – இங்கு
பழுப்பும் பச்சையும் தவிர
வேறு வண்ணங்களே இல்லை
நீ விசும்பத் துவங்குகிறாய்
எங்குமே இல்லாத பூவை
எங்கு போய்த் தேடுவது?
புரிந்து கொள்ளேன்
நீ கண்டு கொள்ள வேண்டியது
இன்னொரு பூவை அல்ல
இன்னொரு வனத்தை
(அம்முவிற்கு)
No comments:
Post a Comment