என் கண்ணாடித் தொட்டி மீன்களின்
பெயர்கள் மறக்கும் புறக்கணிப்பும்
என் வீட்டுப் பூனைகளின்
பசி உணரா அறியாமையும்
தந்துவிட்டிருக்கிறது எனக்கு
தூரதேசம் ஒன்றிற்கு செல்வதாய்
நீ இலகுவாய் செய்துவிட்டிருக்கும்
ஓர் அறிவிப்பு
அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
அணில்களும் தவிட்டுக் குருவிகளும்
முற்றத்தில் காயும் என் நெல்மணிகளை
சதா திருடிய வண்னமிருப்பதை
எப்படி புரிய வைப்பது உனக்கு?
பிரிவென்று ஒன்றை நீ தராமலேயே
உன் மீதான எனது பிரியங்கள்
வளர்ந்து கொண்டே தான் இருக்குமென்று
No comments:
Post a Comment