கவிதைகள்
ஒரு பட்ட மரத்தின்
வெற்றுக் கிளைகளில்
இரு பச்சைக் கிளிகள்
வந்து அமர்கின்றன
சிறகசைத்து . . சிறகசைத்து . .
தன் மீது
இலைகள் அசைந்த காலம்
வந்து போகிறது
மரத்தின் நினைவில்.
No comments:
Post a Comment