பால் முற்றாத கதிரின் மணத்தை
என் அறைக்குள்
நீ தான் அழைத்து வருகிறாய்
அடுத்த முறை நீ எடுத்து வருவதாய்
வசந்த கால மலர்களின்
வாசத்தையும் கற்பனை செய்கிறேன்
அறுவடை காலம் எதிர்நோக்கி
முற்றத்தில் காத்திருக்கும்
துருவேறும் அரிவாள்கள்
விளைச்சல் நிலங்கள் இருக்கும் திசையில்
வரப்புகள் உடைக்கும் பெருமழையின்
ஆரவார ஒலி கேட்கத் தொடங்குகிறது
தவறான பருவங்களில் பொழியச் செய்வதற்கெனவே
என் வயல்வெளிகளில் எப்போதும்
பொறுப்பற்றுப் பறக்கின்றன தட்டான்கள்.
No comments:
Post a Comment