Monday, May 4, 2026

பொறுப்பற்றுப் பறக்கும் தட்டான்கள்

பால் முற்றாத கதிரின் மணத்தை

என் அறைக்குள்

நீ தான் அழைத்து வருகிறாய் 

அடுத்த முறை நீ எடுத்து வருவதாய்

வசந்த கால மலர்களின்

வாசத்தையும் கற்பனை செய்கிறேன்

அறுவடை காலம் எதிர்நோக்கி

முற்றத்தில் காத்திருக்கும்

துருவேறும் அரிவாள்கள்

விளைச்சல் நிலங்கள் இருக்கும் திசையில்

வரப்புகள் உடைக்கும் பெருமழையின்

ஆரவார ஒலி கேட்கத் தொடங்குகிறது

தவறான பருவங்களில் பொழியச் செய்வதற்கெனவே

என் வயல்வெளிகளில் எப்போதும்  

பொறுப்பற்றுப் பறக்கின்றன தட்டான்கள்.

No comments:

Post a Comment