Tuesday, May 5, 2026

தலைகீழாய் தொங்கும் வாழ்வு

 

​எவ்வளவு சுதந்திரம் உன் ஜீவிதம்….!


​அப்படியா…..!?


​எண்ணிய பின் துணிந்தாலும்

துணிந்த பின் எண்ணினாலும்

ஒரு வேறுபாடும் இல்லையே உனக்கு.


​ஓஹோ…!


​எங்கு வேண்டுமானாலும் போகலாம்

எதை வேண்டுமானாலும் செய்யலாம்.


​ம்…

​அப்புறம்…


​நிறுத்து தோழி..

கொல்லைப்புறத்தில் விரிந்திருக்கும்

மாமரத்தில் வீற்றிருக்கும் வௌவாலைப் பார்.

இறக்கைகள் இருந்தாலும் கூட

வாய்த்தது என்னவோ

தலைகீழாய்த் தொங்கும் வாழ்வு தானே….?.!

No comments:

Post a Comment