எவ்வளவு சுதந்திரம் உன் ஜீவிதம்….!
அப்படியா…..!?
எண்ணிய பின் துணிந்தாலும்
துணிந்த பின் எண்ணினாலும்
ஒரு வேறுபாடும் இல்லையே உனக்கு.
ஓஹோ…!
எங்கு வேண்டுமானாலும் போகலாம்
எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
ம்…
அப்புறம்…
நிறுத்து தோழி..
கொல்லைப்புறத்தில் விரிந்திருக்கும்
மாமரத்தில் வீற்றிருக்கும் வௌவாலைப் பார்.
இறக்கைகள் இருந்தாலும் கூட
வாய்த்தது என்னவோ
தலைகீழாய்த் தொங்கும் வாழ்வு தானே….?.!
No comments:
Post a Comment