அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மூன்றாம் தளக் குடியிருப்பில்
தட்டப்படும் நட்டுவாங்கம்
தாளம் தப்பாது ஒலிக்கின்றது.
இரண்டாம் தளத்தில் வசித்தவள்
தூக்கிலிட்டுக் கொண்ட மின்விசிறி
மின்சாரம் திரும்பியதும்
குறைந்த விசையில் சுழல்வதும்
அணைந்ததும்
சட்டென்று நிற்பதுமாய் இருக்கிறது.
கடிகைச் சுற்று திசையிலும் – பின்
எதிர் இடஞ்சுழியிலும் சுழன்று
ஜதிக்கேற்ப ஆடுகிறது அவள் உடல்
தையா தா ஹா..
No comments:
Post a Comment