என் பழம்பெரும் ஊரின்
வெயிலறையும் தெருக்களில்
உன் புன்னகைகள் உலர்கின்றன
புழுதியில் புதைந்ததை அகழ்ந்து
தூசு துடைத்து சேர்க்கிறேன்
கலயம் நிரம்பும் நெருக்கத்தில்
மீண்டு வருகிறாய்
சேர்த்த புன்னகைகள் பொடியாக்கி
மணலாய் விசிறி எறிகிறாய்
இம்முறை காற்றின் திசைகளில்
No comments:
Post a Comment