உடலெங்கும் வழிகிறது
பச்சையாய் பிசுபிசுப்பாய்
கழுத்தைக் கவ்வியிருக்கும்
தனிமையின் எச்சில்
வழித்தெறிய முற்படும்
ஒவ்வொரு முயற்சியிலும்
மேலும் ஒன்றென முளைக்கிறது
தனிமையின் கோரப்பல்
உறக்கத்தின் வாசல் மூடியிருக்கும்
கடவுளின் அந்தப்புரத்தில்
வெடித்து உடைகின்றன
பச்சை நிறத்து மது ஜாடிகள்
No comments:
Post a Comment