Tuesday, May 5, 2026

நான் என்பது..

 

​என் இதயத்தை

எல்லோரும் பார்க்கும்படி

என் சட்டைப்பையின் மேல் தைத்திருக்கிறேன்.

மேல் வானில்

செம்மையாய்ச் சமைந்திருக்கும்

அந்திச் சூரியனைப் போல.

என்னைப் பற்றிய வாக்கியங்களை

மிகச் சுலபமாய்

பிரகடனப்படுத்துகிறேன்.

இலையுதிர் காலத்தின் சருகுகளென

அவை – சாலையோரம்

சரசரத்துத் திரியும்படி.

என்ன…

இப்போதெல்லாம் – நான் எனது

என்று பேசுவதுதான்

சற்று அசூயையாக உள்ளது.

கல்லறை நிலத்தின்

ஈர மண்ணில் காத்திருக்கும்

சின்னஞ்சிறு புழுக்களே..

உங்களுக்குப் படைக்கப்படும்

எந்த இரகசியமுமற்ற

ஓர் உடலை

எவ்வளவு ஆசையாய் உண்பீர்கள்…..!

No comments:

Post a Comment