Monday, May 4, 2026

வேறு வழியின்றி

 சடைமுடி பற்றி எரிந்திட

தண்டைத் தெறித்து கற்கள் சிதற

இடைக்கச்சை மட்டும் அவிழா வண்னம்

ஊர்த்துவம் ஆடுகிறான் சிவன்

நிலம் அதிர அதிர

இடுகாட்டு சாம்பலில்

விழித்திரை புரையோடி

பிணவாடை குடித்து

பேய் துரத்தும் சாத்திரங்கள்

கற்க முயல்கிறாள் பாகீரதி


No comments:

Post a Comment