எண்ணற்ற மதுசாலைகள் திறந்தே கிடக்கும்
எல்லா தெருக்களிலும் ஈரமாய்
மீண்டும் மீண்டும் நீட்டப்படும்
அத்தனை கோப்பைகளுக்கும்
வழிய வழிய ஊற்றிக் கொடுக்கப்படும்
சிறிதும் மறுப்பேதும் இன்றி
சுட்ட மீனோடும் உப்பிட்ட பைனாப்பிளோடும்
வெண்மணற்கரையில் தன்னைத் தேடி வருபவர்க்கு
சதா பெருங்கருணையுடன் காத்திருக்கிறது
ஓய்வற்ற மாஹேயின் மதுக்கடல்
அத்தனை நிரந்தரமானதா..?!
உன் சொந்த ஊரில் வரிசையில் நின்று
வாங்கி அருந்தப்படும் அளவு மதுவின்
சிறிய போதையின் உச்சியில் நின்று
நீ பகர்ந்திடும் அன்பு . .!
No comments:
Post a Comment