அகாலத்தில் உருக்கமாய் உரக்க
கூவும் ஒரு குயிலின் குரல்
குளியலறை தரைப் பிளவுகளில்
துளிர் விட்டிருக்கும் ஒரு விதை
அமாவாசை என்றெண்ணிய மாலை
கிழக்கில் முளைக்கும் வெள்ளிப் பிறை
மழை துவங்கும் நாளில்
சன்னலில் வந்தமரும் பட்டாம்பூச்சி
இப்படியாக
அசர்ந்தப்பமாகவும் அறிவிக்கப்படாமலும்
நிகழ்ந்து விடுகின்றது
உன் வரவும் பிரிவும்
மஞ்சள் வாகை மலர்கள்
மண்ணில் வீழும் ஒலியைக்
கேட்டவாறு கடந்து செல்கிறேன்
காமம் பெருகும் யாமங்களை
No comments:
Post a Comment